உள்ளூர் செய்திகள்
பெண் தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை

Published On 2022-01-07 16:26 IST   |   Update On 2022-01-07 16:26:00 IST
கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பெலட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி ஹேமலதா (வயது 24). இவர் கிருஷ்ணகிரியில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக ஹேமலதா மனமுடைந்து காணப்பட்டார். இதனால் கடந்த 1-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹேமலதா, வி‌ஷம் குடித்தார். இதில் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹேமலதா பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News