உள்ளூர் செய்திகள்
ஓசூரில் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொள்புதூர் அடுத்த மாந்தோப்பு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 25), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.