உள்ளூர் செய்திகள்
அதிக தூக்க மாத்திரை தின்று அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே குடும்ப தகராறில் வெறுப்படைந்த அரசு பஸ் கண்டக்டர் அதிக தூக்க மாத்திரை தின்று தற்கொலை செய்துகொண்டார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுகேந்திரன். இவரது மகன் குரு (வயது 31). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், பிருந்தா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் குருவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் குரு இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து உறவினர்கள் மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கண்டக்டர் குருவின் உடலை கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குருவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுகேந்திரன். இவரது மகன் குரு (வயது 31). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், பிருந்தா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் குருவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் குரு இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து உறவினர்கள் மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கண்டக்டர் குருவின் உடலை கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குருவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.