உள்ளூர் செய்திகள்
வாலிபரிடம் பண மோசடியில் ஈடுபட்ட மூவர் சிறையில் அடைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வாலிபரிடம் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள் (வயது 24) இவருக்கு வாட்ஸ்அப் மூலம் வந்த தகவல்படி பணத்தை உடனடியாக அதாவது ஒரு லட்சத்துக்கு, இரண்டு லட்சம் தருவதாக கூறி தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் படி வாலிபர் அருள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேற்று ஊத்தங்கரை பேருந்து நிலையத்திற்கு வருமாறு அந்த நபர்களை வரவழித்தும் இது குறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின்படி போலீஸார் விரைந்து வந்து பேருந்து நிலையத்தில் மறைந்திருந்து வாலிபர் அருளிடம் வாட்ஸ்அப் தகவல் மோசடி நபர்களிடம் பணம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். அதே போல் வாலிபர் அந்த நபர்களிடம் பணம் கொடுக்கும் போது மறைந்திருந்த போலீஸார் அந்த மர்மநபர்களை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ஒழுகூர் கிராமத்தை சேர்ந்த யோகணன் சத்யா வயது 53, அதே விலாசத்தை சேர்ந்த செல்வகுமார் வயது 41, பழனி 51 என தெரிய வந்தது.
இந்த மோசடியில் ஈடுபட்ட மூவரிடமும் வாலிபர் அருள் கொடுத்த பணத்தை பறிமுதல் செய்தும் மோசடி வழக்கில் கைது செய்ததுடன் மூவர் மீது வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஒசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள் (வயது 24) இவருக்கு வாட்ஸ்அப் மூலம் வந்த தகவல்படி பணத்தை உடனடியாக அதாவது ஒரு லட்சத்துக்கு, இரண்டு லட்சம் தருவதாக கூறி தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் படி வாலிபர் அருள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேற்று ஊத்தங்கரை பேருந்து நிலையத்திற்கு வருமாறு அந்த நபர்களை வரவழித்தும் இது குறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின்படி போலீஸார் விரைந்து வந்து பேருந்து நிலையத்தில் மறைந்திருந்து வாலிபர் அருளிடம் வாட்ஸ்அப் தகவல் மோசடி நபர்களிடம் பணம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். அதே போல் வாலிபர் அந்த நபர்களிடம் பணம் கொடுக்கும் போது மறைந்திருந்த போலீஸார் அந்த மர்மநபர்களை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ஒழுகூர் கிராமத்தை சேர்ந்த யோகணன் சத்யா வயது 53, அதே விலாசத்தை சேர்ந்த செல்வகுமார் வயது 41, பழனி 51 என தெரிய வந்தது.
இந்த மோசடியில் ஈடுபட்ட மூவரிடமும் வாலிபர் அருள் கொடுத்த பணத்தை பறிமுதல் செய்தும் மோசடி வழக்கில் கைது செய்ததுடன் மூவர் மீது வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஒசூர் கிளை சிறையில் அடைத்தனர்.