உள்ளூர் செய்திகள்
தற்கொலை

ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-01-04 17:14 IST   |   Update On 2022-01-04 17:14:00 IST
ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் சிப்காட் மூக்கண்டப்பள்ளி என்.டி.ஆர். நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 32). இவர் ஓசூரில் ரிங் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருடைய மனைவிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரசவம் நடந்தது. அப்போது பெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதில் மனவேதனையில் இருந்து வந்த அய்யப்பன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News