உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

ஓசூர் அருகே கார் மோதி டீக்கடைக்காரர் பலி

Published On 2022-01-04 16:53 IST   |   Update On 2022-01-04 16:53:00 IST
ஓசூர் அருகே கார் மோதி டீக்கடைக்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அகவத்தியூரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 52). இவர் ஓசூரில் சின்ன எலசகிரி பாலாஜி நகர் பகுதியில் தங்கி, டீக்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று அவர், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்கா முத்து மாரியம்மன் கோவில் அருகில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News