உள்ளூர் செய்திகள்
கைது

ஓசூர் அருகே முயல் வேட்டையாடிய விவசாயி கைது

Published On 2022-01-03 15:10 IST   |   Update On 2022-01-03 15:10:00 IST
ஓசூர் அருகே முயல் வேட்டையாடிய விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் அட்கோ போலீசார், நேற்று கெலவரப்பள்ளி அணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக, ஸ்கூட்டரில் நாட்டுத்துப்பாக்கியையும், ஒரு முயலையும் வைத்து கொண்டு வந்த நபரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கெலமங்கலம் அருகே பச்சப்பனட்டியை சேர்ந்த விவசாயி முனியப்பா (வயது45) என்பதும், முயல் வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் ஸ்கூட்டர், நாட்டுத்துப்பாக்கி, முயல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News