உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40). தொழிலாளி. இவருக்கும், இவரது மகனுக்கும் இடையே தகராறு இருந்தது. இந்த நிலையில் நாகராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.