உள்ளூர் செய்திகள்
கைது

கெலமங்கலம் அருகே தகராறில் விவசாயியை தாக்கியவர் கைது

Published On 2022-01-02 16:24 IST   |   Update On 2022-01-02 16:24:00 IST
கெலமங்கலம் அருகே தகராறில் விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

கெலமங்கலம் அடுத்த பச்சப்பனட்டி அருகே உள்ள ஏ.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 37) விவசாயி. இவரது அண்ணன் சொன்னப்பா அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த இடத்தில் தங்களுக்கு உரிமை உள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த நஞ்சப்பா, நாராயணப்பா, சின்னப்பா, சுப்பிரமணி ஆகியோர் சம்பவத்தன்று தகராறு செய்தனர். அத்துடன் முனிராஜ், அவரது அண்ணன் சொன்னப்பாவை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து முனிராஜ் கொடுத்த புகாரின்பேரில் நஞ்சப்பா உள்பட 4 பேர் மீது கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நஞ்சப்பாவை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

Similar News