உள்ளூர் செய்திகள்
மருத்துவ முகாம்

ஓசூரில் சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2022-01-01 16:21 IST   |   Update On 2022-01-01 17:00:00 IST
ஸ்ரீவர்மா ஆயுர்வேதா மருத்துவமனை சார்பில் ஓசூரில் சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
ஓசூர்:

சென்னையை தலைமை இடமாக கொண்டு ஸ்ரீவர்மா ஆயுர்வேதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓசூரில் தேசிய நெடுஞ்சாலை பேஸ்-6 ஆவலப்பள்ளி அட்கோ பஸ்தி ரோட்டில் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இதற்கு ஆயுர்வேத டாக்டர் கே.கவுதமன் தலைமை தாங்கி பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளிக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

முகாமில் சித்தா, ஆயுர்வேதா, பஞ்சகர்மா, யோகா மற்றும் இயற்கை முறையில் சிகிச்சை பெற்று நலம் பெறலாம். முதுகு தண்டுவட வலிகள், மூட்டு வலிகள், சோரியாசிஸ், தோல் நோய்கள், வெண்புள்ளிகள், ஆட்டிசம் போன்றவை குணப்படுத்தப்படும்.

சைனஸ் பிரச்சினைகள், ஆஸ்துமா, சிறுநீரகக்கல், கருமுட்டைப்பை கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், குடல் இறக்கம், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

இதுபோன்ற முகாம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களிலும் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News