உள்ளூர் செய்திகள்
கைது

கிருஷ்ணகிரி அருகே கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது

Published On 2022-01-01 16:11 IST   |   Update On 2022-01-01 16:11:00 IST
கிருஷ்ணகிரி அருகே கஞ்சா செடி வளர்த்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே பி.சிங்கிரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மப்பா (வயது45). கூலித்தொழிலாளி. இவரது வீட்டில், கஞ்சா செடி வளர்த்து வருவதாக பேரிகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனை செய்து அவர் வீட்டில் வளர்த்து வந்த 6 கஞ்சா செடிகளை அழித்தனர். இதுதொடர்பாக போலீசார், அவரை கைது செய்தனர்.

Similar News