உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

கெலமங்கலம் அருகே விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

Published On 2022-01-01 08:38 GMT   |   Update On 2022-01-01 08:38 GMT
கெலமங்கலம் அருகே விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே உள்ள ஏ.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர்கள் முனிராஜ் (வயது 37), சொன்னப்பா. விவசாயிகள். இவர்களில் சொன்னப்பா அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த இடத்தில் தங்களுக்கு உரிமை உள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த நஞ்சப்பா, நாராயணப்பா, சின்னப்பா, சுப்பிரமணி ஆகியோர் தகராறு செய்தனர். அப்போது அவர்கள் சொன்னப்பா, முனிராஜ் ஆகியோரை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின்பேரில் நஞ்சப்பா உள்பட 4 பேர் மீதும் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News