உள்ளூர் செய்திகள்
வேட்டவலத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் 7 பவுன் நகை கொள்ளை
வேட்டவலத்தில் தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகைகளை கொள்ளை கும்பல் திருடிச் சென்றுள்ளனர்.
வேட்டவலம்:
வேட்டவலம் தம்புகாரன் தெருவைச் சேர்ந்தவர் உஷா (வயது 52). இவர் அண்ணாநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் மருமகள் ஞானசவுந்தரி, பேத்தி ரியா ஆகியோருடன் வசித்து வருகிறார்.
உஷா பள்ளி விடுமுறை காரணமாக கடந்த 27ஆம் தேதி காலை சிதம்பரத்தில் உள்ள தனது மகள் சௌமியா வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே ஞான சௌந்தரி தனது மகளை அழைத்துக் கொண்டு ஆங்குணம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் உஷா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உஷாவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்ட உஷா அதிர்ச்சி அடைந்து சிதம்பரத்திலிருந்து ஊருக்கு வந்தார். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அவரது மருமகளுக்கு சொந்தமான 7 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து உஷா வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கூறினார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லக்ஷ்மிபதி எஸ்.ஐ. ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
வேட்டவலம் தம்புகாரன் தெருவைச் சேர்ந்தவர் உஷா (வயது 52). இவர் அண்ணாநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் மருமகள் ஞானசவுந்தரி, பேத்தி ரியா ஆகியோருடன் வசித்து வருகிறார்.
உஷா பள்ளி விடுமுறை காரணமாக கடந்த 27ஆம் தேதி காலை சிதம்பரத்தில் உள்ள தனது மகள் சௌமியா வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே ஞான சௌந்தரி தனது மகளை அழைத்துக் கொண்டு ஆங்குணம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் உஷா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உஷாவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்ட உஷா அதிர்ச்சி அடைந்து சிதம்பரத்திலிருந்து ஊருக்கு வந்தார். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அவரது மருமகளுக்கு சொந்தமான 7 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து உஷா வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கூறினார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லக்ஷ்மிபதி எஸ்.ஐ. ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.