உள்ளூர் செய்திகள்
கைது

ஓசூர் பஸ் நிலையத்தில் மாணவியிடம் செயின் பறிக்க முயன்ற பெண் கைது

Published On 2021-12-30 10:03 GMT   |   Update On 2021-12-30 10:03 GMT
ஓசூர் பஸ் நிலையத்தில் மாணவியிடம் செயின் பறிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

பெங்களூரு ஜெயநகர் பகுதியை சேர்ந்தவர் லீனா (வயது 20). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். 

சம்பவத்தன்று அவர் பெங்களூரு செல்ல ஓசூர் பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது பெண் ஒருவர், லீனாவின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறிக்க முயன்ற போது கையும், களவுமாக பிடிபட்டார். 

பின்னர்அந்த பெண், ஓசூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பழனியை சேர்ந்த ரவி என்பவரது மனைவி மகேஸ்வரி (45) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News