உள்ளூர் செய்திகள்
விஷம்

கீழ்பென்னாத்தூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

Published On 2021-12-29 15:05 IST   |   Update On 2021-12-29 15:05:00 IST
கீழ்பென்னாத்தூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூரை அடுத்த வாணியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்குமார். இவரது மகள் பூமிகா (வயது 19). இவர், கடந்த 25-ந்தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூமிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News