உள்ளூர் செய்திகள்
செங்கம் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது
செங்கம் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:
செங்கம் சுற்றுவட்ட கிராமப்பகுதிகளில் சாராய விற்பனையை தடுப்பதற்காக போலீசார் ரோந்துப்பணியி்ல் ஈடுபட்டிருந்தனர் செங்கம் அடுத்துள்ள பி.எல்.தண்டா பகுதியில் ரோந்து சென்றபோது சாராயம் விற்பனை செய்த அஞ்சலா (வயது 45), வெங்கடேசன் (43), சங்கர் (48), தனுசு (40) உள்ளிட்ட நபர்களை அவர்கள் கைது செய்தனர்.