உள்ளூர் செய்திகள்
பெண் தற்கொலை

நெல்லையில் அண்ணன் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

Published On 2021-12-25 09:24 GMT   |   Update On 2021-12-25 09:24 GMT
நெல்லை அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:

நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தை சேர்ந்தவர் பிச்சுமணி. இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 50). இவரது அண்ணன் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் மீது சுப்புலட்சுமி அதிக பாசம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தார். சரியாக சாப்பிடாமல் இருந்து வந்த அவரை உறவினர்கள் ஆறுதல்படுத்தி வந்தனர். எனினும் அவர் சோகமாக காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்புலட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சந்திப்பு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News