உள்ளூர் செய்திகள்
தற்கொலை

செய்யாறு அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-12-24 19:42 IST   |   Update On 2021-12-24 19:42:00 IST
செய்யாறு அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:

வெம்பாக்கம் தாலுகா பெருங்கோட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம், நெசவுத்தொழிலாளி. இவரின் மனைவி அஞ்சலை (வயது 39). இவர், கடந்தசில நாட்களாக உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அஞ்சலை மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரி அன்னபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News