உள்ளூர் செய்திகள்
தற்கொலை

செய்யாறு அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2021-12-23 15:28 IST   |   Update On 2021-12-23 15:28:00 IST
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:

செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் கிராமம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 40), இவர் பட்டுத்தறி நெய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஞ்சலி. இவருக்கு அடிக்கடி உடல் நலகுறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை அளித்தும் சரியாகாததால் மனமுடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பாலசுந்தரம் மோரணம்போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாரி அன்ன பாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News