உள்ளூர் செய்திகள்
நீரில் மூழ்கி பலி

தேசூர் அருகே குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி

Published On 2021-12-20 16:51 IST   |   Update On 2021-12-20 16:51:00 IST
தேசூர் அருகே குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:

தேசூரை அடுத்த உடையான்தாங்கல் கிராமத்தில் வசிப்பவர் சிவா (வயது 31). இவரின் மனைவி ஜோதி (25). இவர்களுக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். 15-ந்தேதி லட்சுமி நகர் அருகே உள்ள குளத்தில் சிவா, அவரின் நண்பர்களான சிவசங்கரன், சதீஷ் ஆகியோர் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சிவா குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அவர் நீந்தி கரையேற முடியாமல் தவித்தார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினார். அவரை, சக நண்பர்கள் காப்பாற்றி வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் சிவா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News