பாவூர்சத்திரத்தில் மனைவியின் வளைகாப்புக்கு அழைக்காததால் வாலிபர் தற்கொலை
பாவூர்சத்திரத்தை அடுத்த கீழப்பாவூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் மாரி செல்வம்(வயது 26). விவசாயி. இவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சேர்ந்த வைதேகி என்பவருக்கும் திருமணம் நடந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமான வைதேகி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாரி செல்வம் திடீரென விஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வைதேகிக்கு சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.
அதற்கு வைதேகியின் பெற்றோர், மாரி செல்வத்தை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாரிசெல்வம் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். அந்த விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.