உள்ளூர் செய்திகள்
உடுமலையில் பயன்பாட்டுக்கு வராத நடைமேம்பாலம்
நடைமேம்பாலம் கட்டப்பட்டு 2 வருடத்திற்கு மேலாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் உள்ளது.
உடுமலை:
உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே ரூ.1.50 கோடி செலவில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது.
பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்க இந்த நடை மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த நடைமேம்பாலம் கட்டப்பட்டு 2 வருடத்திற்கு மேலாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்காமல் இருந்து வருகிறது.
எனவே உடனடியாக இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.