உள்ளூர் செய்திகள்
நீரில் மூழ்கி பலி

விருத்தாசலம் அருகே ஆற்று வெள்ளத்தில் மூழ்கி என்ஜினீயர் பலி

Published On 2021-12-05 04:20 GMT   |   Update On 2021-12-05 04:20 GMT
விருத்தாசலம் அருகே ஆற்று வெள்ளத்தில் மூழ்கி என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோ.ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது21). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். வினோத்குமார் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள மணிமுக்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குளிக்க சென்றார். தற்போது பெய்த மழையினால் அந்த தடுப்பணையில் வெள்ள நீர் பெருக் கெடுத்து ஓடியது.

வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தடுப்பணையின் குறுக்கே நடந்து சென்று மறுகரையில் உள்ள மதகின் ஆழமான பகுதியில் இறங்கி குளித்து கொண்டிருந்தார்.

வினோத்குமார் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லபட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் வினோத்குமாரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விருத்தாசலம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மணிமுக்தா ஆற்றில் இறங்கி வினோத் குமாரை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் கீழபாலையூர் அணைக்கட்டு பகுதியில் இறந்த நிலையில் வினோத்குமாரின் உடல் கரைஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புகுழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வினோத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

வினோத்குமார் இன்னும் சில தினங்களில் வெளிநாடு செல்ல இருந்த நிலையில் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News