உள்ளூர் செய்திகள்
சாலையில் சிதறி கிடந்த நோயாளிகள் விவர படிவங்கள்-அதிகாரிகள் விசாரணை
108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்ல படிவங்கள் வழங்கப்படுகிறது .
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள குங்குமம்பாளையம் பிரிவு பேருந்து நிறுத்தம் அருகில் கத்தை கத்தையாக வெள்ளை காகிதங்கள் கிடந்தன.இவற்றை எடுத்து பார்த்த போது அவை அரசு மருத்துவமனையின் மருத்துவர் மூலம் நோயாளிகள் குறித்த விவரங்கள் உள்ள படிவங்கள் என்பது தெரியவந்தது.
அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யும் போது 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்ல இந்த படிவங்கள் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் இந்தப் படிவங்கள் ஆம்புலன்சில் இருந்து தவறி விழுந்ததா ?அல்லது வீசப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து அந்த படிவங்கள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.