செய்திகள்
மழை

கடலூர் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 18 செ.மீ. மழை பதிவு

Published On 2021-11-29 07:05 GMT   |   Update On 2021-11-29 07:05 GMT
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர்:

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில் இரவு நேரத்தில் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. நள்ளிரவில் மழையின் வேகம் அதிகரித்து பலத்த மழை கொட்டியது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது.

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

கடலூர்-173.2, கலெக்டர் அலுவலகம்-170.2, பரங்கிப் பேட்டை-105.2, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி-100, வானமா தேவி-98.8, வேப்பூர்-87, குறிஞ்சிப்பாடி-85, காட்டுமயிலூர்-84, கொத்தவாச்சேரி-83, வடக்குத்து-70.5, புவனகிரி-70, மே.மாத்தூர்-70, பண்ருட்டி-66, அண்ணாமலைநகர்-65, காட்டுமன்னார் கோவில்-64, சிதம்பரம்-63.2, சேத்தியத்தோப்பு-61.2, லால்பேட்டை-60.6, விருத்தாசலம்-53.2, குப்பநத்தம்-52, ஸ்ரீமுஷ்ணம்-51.2, பெலாந்துறை-43.2, கீழச்செருவாய்-34, தொழுதூர்-27, லக்கூர்-9.3.

கடலூர் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரத்தில் மொத்தமாக-1846.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News