செய்திகள்
விபத்து பலி

புதுக்கோட்டை அருகே விபத்தில் படுகாயமடைந்தவர் பலி

Published On 2021-11-27 10:08 GMT   |   Update On 2021-11-27 10:08 GMT
புதுக்கோட்டை அருகே விபத்தில் படுகாயமடைந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). இவர் சம்பவத்தன்று வடக்கு ராஜவீதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சிவக்குமார் இறந்தார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News