உலகம்

இந்தோனேசியாவில் 11 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம்

Published On 2026-01-18 03:42 IST   |   Update On 2026-01-18 03:42:00 IST
  • மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
  • மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு நேற்று மதியம் சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 11 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கி இருக்கலாம் எனவும், அதில் பயணித்த அனைவரும் உயி இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags:    

Similar News