செய்திகள்
மின்சார நிறுத்தம்

மயிலாடுதுறை, மேமாத்தூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

Published On 2021-11-26 11:56 GMT   |   Update On 2021-11-26 11:56 GMT
மயிலாடுதுறை, மணக்குடி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
மயிலாடுதுறை:

மின்வாரிய மயிலாடுதுறை செயற்பொறியாளர் முத்துக்குமரன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை, மணக்குடி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் மயிலாடுதுறை நகரம், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனதாண்டவபுரம், வழுவூர், கிளியனூர் ஆகிய பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும். மேமாத்தூர், கீழ்மாத்தூர், நல்லுச்சேரி, மேலகட்டளை, கடலி, நரசிங்கநத்தம், ஆறுபாதி மற்றும் பரசலூரில் ஒரு பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை செம்பனார்கோவில் மின் உதவி செயற் பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News