செய்திகள்
மருங்குளம் இ-சேவை மையத்தில் கம்ப்யூட்டர், பிரிண்டர் திருட்டு
மருங்குளம் இ-சேவை மையத்தில் கம்ப்யூட்டர், பிரிண்டர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள மருங்குளத்தில் கிராம இ- சேவை மையம் உள்ளது. சம்பவத்தன்று இரவு இந்த மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் ஆகியவைகளை திருடி சென்றுள்ளனர்.
இந்நிலையில் காலை அங்கு வந்த அலுவலர்கள் கம்ப்யூட்டர் பிரிண்டர் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிராம சேவை மைய நிர்வாகி ராஜேஸ்வரி (வயது 45) கொடுத்துள்ள புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.