செய்திகள்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளதை காணலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை

Published On 2021-11-26 14:21 IST   |   Update On 2021-11-26 14:21:00 IST
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ததால் நீர்த்தேக்கங்கள் நிரம்பி, பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பியதால் தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மருதையாற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பகல் நேரத்தில் மழை பெய்யாமல், இரவு நேரத்தில் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்தது.

இந்நிலையில் நேற்று காலை அவ்வப்போது விட்டு, விட்டு மழையாக தூறிக்கொண்டிருந்தது. மதியம் 1.15 மணிக்கு திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரைமணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது.

இதையடுத்து மதியம் 2.30 மணிக்கு மீண்டும் பெய்ய தொடங்கிய பலத்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இரவிலும் மழை பெய்தது. நேற்று பெய்த மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News