செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் அணைப்பாளையத்தில் பொதுமக்கள் போராட்டம்

Published On 2021-11-25 07:38 GMT   |   Update On 2021-11-25 07:38 GMT
போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து திருப்பூர் மத்திய போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருப்பூர்:

திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் கடை அமைக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கடை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தது. 

இதனை கண்டித்து இன்று அப்பகுதி பொதுமக்கள் அங்கு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து திருப்பூர் மத்திய போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
Tags:    

Similar News