செய்திகள்
ரங்கசாமி

ரங்கசாமிக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசி

Published On 2021-11-25 03:06 GMT   |   Update On 2021-11-25 03:06 GMT
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி 2வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரது வீட்டிற்கு சென்று மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொரோனா தொற்று காலத்தில் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தார். இந்தநிலையில் முதல்-அமைச்சராக பதவியேற்ற நிலையில் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்.

இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பின் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

இந்தநிலையில் நேற்று 2-வது தவணை தடுப்பூசியை ரங்கசாமி போட்டுக்கொண்டார். அவரது வீட்டிற்கு சென்று மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர். இதன்பின் சிறிது நேரம் அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்தார். இதனால் நேற்று காலை அலுவலகத்துக்கும் வரவில்லை. பிற்பகலில் வழக்கம்போல் தனது பணிகளை ரங்கசாமி தொடர்ந்தார்.
Tags:    

Similar News