செய்திகள்
கோப்பு படம்

சேந்தமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி

Published On 2021-11-24 18:01 GMT   |   Update On 2021-11-24 18:01 GMT
சேந்தமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்:

மாரமங்கலத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 36). கட்டிட மேஸ்திரியான இவர் வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலையும் பார்த்து வந்தார். இந்த நிலையில் சேந்தமங்கலம் அருகே உள்ள நடுக்கோம்பை குட்டுக்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உயிருக்கு போராடிய அவரை வீட்டில் இருந்தவர்கள் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி பலியான கோவிந்தராஜிக்கு சசிகலா (31) என்ற மனைவியும், 11 மற்றும் 9 வயதில் 2 மகள்களும் உள்ளனர்.
Tags:    

Similar News