செய்திகள்
கோவை அருகே மடிக்கணினி திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). தனியார் நிறுவன மேலாளர். சம்பவத்தன்று இவர் கோவை-திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே தனது காரை நிறுத்தி இருந்தார். காரில் இவரது மடிக்கணினி இருந்தது. இதனை மர்ம நபர் காரை திறந்து மடிக்கணினியை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில்சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.