செய்திகள்
விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பருத்தி மூட்டைகள்.

தொடர் மழையால் பருத்தி ஏலம் பாதிப்பு

Published On 2021-11-18 13:04 IST   |   Update On 2021-11-18 13:04:00 IST
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.
அவினாசி:

அவினாசி, ஆட்டையாம்பாளையம், பழங்கரை, வேலாயுதம்பாளையம், கருவலூர், நம்பியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

இதனால் ரோட்டில் பள்ளமான இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. சிறிய குளம்,குட்டைகளில் மழைநீர் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். வழக்கம்போல் நேற்று விவசாயிகள் தங்களது பருத்தி மூட்டைகளை ஏல மையத்திற்கு கொண்டு வந்தனர். பருத்தி ஏலம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் மாலையில் தொடர் மழை பிடித்ததால் பருத்தி ஏலம் பாதியில் தடைபட்டது.
Tags:    

Similar News