செய்திகள்
கொரோனா தடுப்பூசி

நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-11-16 04:22 GMT   |   Update On 2021-11-16 04:22 GMT
நீலகிரி மாவட்டத்தில் 8-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 318 மையங்களில் நடந்தது. மேலும் 20 வாகனங்கள் மூலம் தொலை தூர இடங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் 2-வது டோஸ் தடுப்பூசி 100 சதவீதம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் 8-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 318 மையங்களில் நடந்தது. மேலும் 20 வாகனங்கள் மூலம் தொலை தூர இடங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

8-ம் கட்ட முகாமில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக போதுமான அளவு டோஸ்கள் இருப்பில் வைக்கப்பட்டது. முடிவில் 17,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News