செய்திகள்
வாக்காளர் பட்டியல்

கனமழையால் பாதிப்பு அடைந்த வாக்காளர்களுக்காக கூடுதலாக 2 சிறப்பு முகாம்

Published On 2021-11-16 00:53 GMT   |   Update On 2021-11-16 00:53 GMT
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குதல் குறித்த சிறப்பு முகாம்கள் நவம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது.
சென்னை:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குதல் குறித்த சிறப்பு முகாம்கள் கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு உள்பட சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் நடைபெற இருந்தன.

இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வந்ததாலும், பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டதாலும், பொதுமக்கள் நலன் கருதி சிறப்பு முகாம்கள் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், பொதுமக்கள் பயனடைய வசதியாக வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் மேலும் 2 சிறப்பு முகாம்களை நடத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News