செய்திகள்
தூத்துக்காடு ஊராட்சி இருளர் காலனி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

ஆற்றில் வெள்ளம் ஓடுவதால் மலைவாழ் மக்களின் போக்குவரத்து பாதிப்பு - அதிகாரிகள் ஆய்வு

Published On 2021-11-15 16:36 IST   |   Update On 2021-11-15 16:36:00 IST
துத்திக்காடு கிராமத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மலைகிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அடுக்கம்பாறை:

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம் துத்திக்காடு ஊராட்சிக்கு உட்பட்டது தெள்ளை மலை கிராமம். சுமார் 200 வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் ரேஷன் கடை, மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அன்றாட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொள்ள சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துத்துக்காடு கிராமத்திற்கு நடந்து செல்கின்றனர். மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் 6 இடங்களில் காட்டாறு செல்கிறது.

தற்போது தொடர் மழை பெய்து வருவதால் இந்த காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் மலைவாழ் மக்கள் மிகவும் சிரமப்படுவதுடன், வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கணியம்படி வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் கஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், துத்திக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பாபு, ஊராட்சி செயலாளர் பாபு உள்ளிட்டோர் ஆற்றில் மழை நீர் செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மலை கிராம மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்குள்ள இருளர் காலனி பகுதியிலும் ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News