செய்திகள்
கோப்புபடம்.

பல்லடத்தில் குப்பையில் ஆண் சிசுவை வீசிச்சென்ற தாய் யார்? போலீசார் விசாரணை

Published On 2021-11-15 07:52 GMT   |   Update On 2021-11-15 07:52 GMT
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த ஆண் சிசுவை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வடுகபாளையத்திலிருந்து சித்தம்பலம் செல்லும் ரோட்டில் குப்பை கொட்டும் இடம் உள்ளது. அந்தப்பகுதி மக்கள் அங்கு குப்பை கொட்டி வருகின்றனர். 

இந்தநிலையில் நேற்று குப்பை கொட்ட சென்ற ஒருவர் அங்கு பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு கிடப்பதைப் பார்த்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த ஆண் சிசுவை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிசுவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சிசு இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த ஆண் சிசுவின் தாய் யார்? எதற்காக குப்பையில் வீசி சென்றார் என்பது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தகாத உறவில் பிறந்ததன் காரணமாக ஆண்சிசுவை குப்பையில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
Tags:    

Similar News