செய்திகள்
கைதான அன்பானந்தன்.

திருப்பூரில் மும்பை அழகிகளை வைத்து பங்களா வீட்டில் ஹைடெக் விபசாரம் - வாடிக்கையாளர் போல் சென்று போலீசார் மடக்கினர்

Published On 2021-11-15 07:51 GMT   |   Update On 2021-11-15 07:51 GMT
போலீசார் அந்த பங்களாவுக்கு வாடிக்கையாளர் போல் சென்றனர். அங்கு சென்றதும் விபசார அழகிகள் இருந்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் அப்பாச்சிநகரில் பங்களா வீடு உள்ளது. இங்கு தினமும் சம்பந்தம் இல்லாத நபர்கள் வந்து செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.  

போலீசார் விசாரணை நடத்திய போது அங்கு ஆன்லைன் மூலம்  விபசாரம் நடைபெற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆன்லைனில் உள்ள செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு போலீசார் பேசினர். 

அப்போது பேசிய நபர், எங்களிடம் மும்பை அழகிகள் இருப்பதாகவும், உல்லாசம் அனுபவிக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ.3ஆயிரம், வெளியில் அழைத்து செல்ல வேண்டுமென்றால் ரூ.10ஆயிரம் என்று தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து போலீசார் அந்த பங்களாவுக்கு வாடிக்கையாளர் போல் சென்றனர். அங்கு சென்றதும் விபசார அழகிகள் இருந்துள்ளனர். இதுகுறித்து பங்களா வெளியே நின்ற போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் பங்களாவுக்குள் நுழைந்து விபசார கும்பலை மடக்கி பிடித்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த அன்பானந்தன் (வயது 60) என்பவர் மும்பை அழகிகள் 2பேரை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 2 அழகிகளை மீட்டதுடன், அன்பானந்தவனை கைது செய்தனர். அவர் மும்பை அழகிகளை விமானம் மூலம் திருப்பூருக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். 

மேலும் அன்பானந்தனுக்கு உதவியாக 2 பேர் செயல்பட்டு உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News