செய்திகள்
பழையக்கோட்டை மாட்டுச்சந்தையில் ரூ.21 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை
விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 128 காங்கேயம் இன காளைகள், பசுமாடுகளில் மொத்தம் 60 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
நேற்று காங்கேயம் இன பசுமாடுகளை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.
விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 128 காங்கேயம் இன காளைகள், பசுமாடுகளில் மொத்தம் 60 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.
இதன்படி சந்தையில் அதிகபட்சமாக காங்கேயம் இன கிடாரி கன்றுடன் மயிலை பசுமாடு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
மேலும் சந்தையில் காங்கேயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.36 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது.
இதன்படி ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.21 லட்சத்துக்கு காங்கேயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.