செய்திகள்
தேவதானம் சாஸ்தா கோவில் அணை நிரம்பி வழிவதை காணலாம்

தேவதானம் சாஸ்தா கோவில் அணை நிரம்பியது- பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?

Published On 2021-11-15 09:05 IST   |   Update On 2021-11-15 09:05:00 IST
தேவதானம் சாஸ்தா கோவில் அணை நிரம்பியதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தளவாய்புரம்:

சேத்தூர் அருகே 10 கிலோமீட்டர் தொலைவில் தேவதானம் சாஸ்தா கோவில் அணை உள்ளது. இந்த அணை சுமார் 36 கன அடி கொள்ளளவு கொண்டது. தற்போது பெய்த தொடர் மழையினால் இந்த அணை நிரம்பி வழிகிறது.

இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் நெல் பயிரிட்டுள்ளனர். இந்த அணை பாசனத்துக்காக திறக்கப்பட்டால் தேவதானம், சேத்தூர், சுந்தரராஜபுரம், சொக்கநாதன்புத்தூர், புத்தூர், இளந்திரை கொண்டான், முகவூர், கொல்லங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரும்.

இதனால் இப்பகுதி உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

தொடர்மழையின் காரணமாக தேவதானம் சாஸ்தா கோவில் அணை நிரம்பியது. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு விரைவில் தேவதானம் சாஸ்தா கோவில் அணையை பாசனத்திற்காக திறந்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News