செய்திகள்
திருட்டு

பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் நகை- பணம் திருட்டு

Published On 2021-11-13 11:30 GMT   |   Update On 2021-11-13 11:30 GMT
பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் நகை- பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபநாசம்:

பாபநாசம் அருகே திருக்கருகாவூர் ஸ்ரீவாரி நகர் பிரியங்கா தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 34). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று மணிகண்டன் வீட்டை பூட்டி விட்டு தனது சகோதரி வீடான கும்பகோணத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கச் செயின் 3 பவுன் தங்கத்தோடு 1½ பவுன், வெள்ளி டம்ளர், வெள்ளி குத்து விளக்கு, பால் கிண்ணம் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் உள்பட 1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி தப்பி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மணிகண்டன் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதள்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொ) சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தஞ்சையில் இருந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் கீதா வருகை தந்து கொள்ளையர்களின் கைரேகைகளை சோதனை செய்தார். தஞ்சையில் இருந்து டப்பி என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்து அருகில் தோப்பு வரை ஓடி சென்று படுத்துக்கொண்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News