செய்திகள்
கோப்புபடம்.

பல்லடம் அருகே போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்த தொழிலாளி தற்கொலை

Published On 2021-11-12 13:22 IST   |   Update On 2021-11-12 13:22:00 IST
ஜன்னல் வழியே பார்த்தபோது வீட்டின் கூரை விட்டத்தில் சண்முகம் கயிறு மூலம் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டிருந்தார்.
பல்லடம்

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம்(வயது 59). கூலித்தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டில் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் .

சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவர் வழக்கு விசாரணைக்காக அடிக்கடி நீதிமன்றத்திற்குச் சென்று வந்தார். இந்தநிலையில் அவரது உறவினர்களிடம் எனக்கு வயது ஆகிவிட்டது முன்புபோல் இருக்க முடியவில்லை, இந்த வழக்கு நடப்பதால் அடிக்கடி கோர்ட்டுக்கு செல்ல வேண்டி இருக்கிறது என வருத்தத்துடன் கூறி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இவரது வீடு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை . 

இதையடுத்து அக்கம் பக்கம் வசிக்கும் உறவினர்கள் கதவைத் தட்டிப் பார்த்தனர், கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியே பார்த்தபோது வீட்டின் கூரை விட்டத்தில் சண்முகம் கயிறு மூலம் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டிருந்தார். 

இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து அவரது மகள் பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
Tags:    

Similar News