செய்திகள்
வாழை மரம்

தொடர் மழையில் இருந்து பயிர்களை காப்பாற்றுவது எப்படி?- அதிகாரி விளக்கம்

Published On 2021-11-10 12:13 IST   |   Update On 2021-11-10 12:13:00 IST
தொடர்மழையில் இருந்து பயிர்களை காப்பாற்றுவது எப்படி என்பது பற்றி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தாயில்பட்டி:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் பருவமழை மற்றும் சூறை காற்றில் இருந்து பயிர்களை பாதுகாப்பது குறித்தும், கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் வெம்பக்கோட்டை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் குணசீலி அறிவுரை வழங்கி உள்ளார்.

வெம்பக்கோட்டை வட்டாரத்தில் 42 ஹெக்டர் பரப்பளவில் வாழை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வாழைமரம் சூறைக்காற்றில் இருந்து சேதம் அடையாமல் இருக்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் முட்டுக் கொடுப்பதன் மூலம் காற்றிலிருந்து வாழைமரத்தை பாதுகாக்க முடியும்.

வாழை மரங்களின் கீழ்மட்ட கிளைகளை அகற்ற வேண்டும். வாழையில் 75 சதவீதத்திற்கும் மேல் காய்கள் முதிர்ந்து இருந்தால் அவற்றை அறுவடை செய்வதன் மூலம் மகசூல் இழப்பை தடுக்கலாம்.

மாமரங்களில் காவாத்து செய்து சுமையை குறைப்பதன் மூலம் மரங்கள் சேதமடைவதை தவிர்க்கலாம். மா, கொய்யா, மாதுளை, எலுமிச்சை போன்ற சிறிய செடிகளை காற்றினால் பாதிக்காத வகையில் தாங்கு குச்சிகளை கட்டவேண்டும்.

தொடர்மழை விவசாயிகளின் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி காய்கறிகளை வீணாவதை தடுக்க வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். தக்காளி செடிக்கு ஊன்றுகோல் பயன்படுத்த வேண்டும்.

காய்கறிகள் மற்றும் மலர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டிரைக்கோ டெர்மா, விரிடி மற்றும் சூடோமோனாஸ் முதலான உயிரிபூஞ்சான கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம் வேர் அழுகல் நோயிலிருந்து பாதிப்பை குறைக்க முடியும். இவ்வாறு தொடர் மழை மற்றும் சூறாவளி காற்று எதிர்கொள்ள விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற இழப்பைத் தடுக்கமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News