செய்திகள்
பலியான மகேஸ்வரன்

சாத்தூர் அருகே கண்மாயில் மூழ்கி டிரைவர் பலி

Published On 2021-11-09 04:38 GMT   |   Update On 2021-11-09 04:38 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கண்மாயில் மூழ்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த புழுகாண்டி மகன் மகேஸ்வரன் (வயது 27). வேன் டிரைவர்.

இவர் இன்று அந்த பகுதியில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றார். கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் கண்மாயில் நீரின் வேகம் அதிகமாக இருந்துள்ளது. இதனை அறியாமல் கண்மாய்க்குள் இறங்கிய மகேஸ்வரன் ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென நீரில் மூழ்கி உள்ளார்.

இதனை கண்டவர்கள் கண்மாய்க்குள் இறங்கி மகேஸ்வரனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கண்மாயில் இறங்கி தேடி மகேஸ்வரன் உடலை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான மகேஸ்வரனுக்கு மாரீஸ்வரி (24) என்ற மனைவியும், மகாலட்சுமி (5), திவ்யா (2) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.
Tags:    

Similar News