செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 75 வீடுகள் சேதம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக சோளிங்கர் அரக்கோணம் பகுதியில் இன்று 3 வீடுகள் இடிந்தன.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 1-ந் தேதி முதல் இன்று வரை தொடர்மழையால் 3 பேர் பலியாகி உள்ளனர். 3 பசுமாடுகள் இறந்துள்ளன.
இதேபோல மாவட்டம் முழுவதும் 75 வீடுகள் இடிந்துள்ளன. இதில் 9 வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது.
மழை பாதிப்பால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்குவதற்காக 27 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று வரை இந்த முகாம்களில் பொதுமக்கள் யாரும் தங்க வைக்கப்படவில்லை.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக சோளிங்கர் அரக்கோணம் பகுதியில் இன்று 3 வீடுகள் இடிந்தன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மழையினால் சேதம் ஏற்படவில்லை. ஆண்டியப்பனூர் அணை நிரம்பி ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:
வேலூர் 18.9 செ.மீ.
வாலாஜா 52.6 செ.மீ.
அரக்கோணம் 22.2 செ.மீ.
சோளிங்கர் 29.4 செ.மீ.
கலவை 11.2 செ.மீ.
திருப்பத்தூர் 20.2 செ.மீ.
ஆம்பூர் 59.4 செ.மீ.
ஆலங்காயம் 78.6 செ.மீ.
நாட்றம்பள்ளி 29.4 செ.மீ.
ஜோலார்பேட்டை 26 செ.மீ.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 1-ந் தேதி முதல் இன்று வரை தொடர்மழையால் 3 பேர் பலியாகி உள்ளனர். 3 பசுமாடுகள் இறந்துள்ளன.
இதேபோல மாவட்டம் முழுவதும் 75 வீடுகள் இடிந்துள்ளன. இதில் 9 வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது.
மழை பாதிப்பால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்குவதற்காக 27 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று வரை இந்த முகாம்களில் பொதுமக்கள் யாரும் தங்க வைக்கப்படவில்லை.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக சோளிங்கர் அரக்கோணம் பகுதியில் இன்று 3 வீடுகள் இடிந்தன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மழையினால் சேதம் ஏற்படவில்லை. ஆண்டியப்பனூர் அணை நிரம்பி ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:
வேலூர் 18.9 செ.மீ.
வாலாஜா 52.6 செ.மீ.
அரக்கோணம் 22.2 செ.மீ.
சோளிங்கர் 29.4 செ.மீ.
கலவை 11.2 செ.மீ.
திருப்பத்தூர் 20.2 செ.மீ.
ஆம்பூர் 59.4 செ.மீ.
ஆலங்காயம் 78.6 செ.மீ.
நாட்றம்பள்ளி 29.4 செ.மீ.
ஜோலார்பேட்டை 26 செ.மீ.