செய்திகள்
விபத்து பலி

அஞ்செட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து விவசாயி பலி

Published On 2021-11-06 19:41 IST   |   Update On 2021-11-06 19:41:00 IST
அஞ்செட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஞ்செட்டி அடுத்த கொப்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 35). விவசாயி. இவர் நேற்று முன்தினம் ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். கொப்பக்கரை வனச்சாலையில் உள்ள ஆலமரத்து வளைவில் வந்த போது ஆட்டோ, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News