செய்திகள்
அண்ணாமலை

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்- 8ம் தேதி போராட்டம் நடத்துகிறது பாஜக

Published On 2021-11-05 10:06 GMT   |   Update On 2021-11-05 14:34 GMT
முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறியபோதும் தொடர்ந்து சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது.
சென்னை:

முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

தமிழக அரசுதான் முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருவதாக  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தார். இருந்தாலும் அணை திறக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வரும் 8ஆம் தேதி பாஜக சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதேபோல் அதிமுக சார்பில் 9ம் தேதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News