செய்திகள்
மண்ணச்சநல்லூர் அருகே தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளை
மண்ணச்சநல்லூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர்:
மண்ணச்சநல்லூர்அருகே சமயபுரம் ரோட்டை சேர்ந்தவர் கோபால் (வயது 64).கூலி தொழிலாளி. இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உள்ள உறவினரை பார்க்க சென்று விட்டார். பின்னர் தீபாவளியைபண்டிகையை கொண்டாட நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து கோபால் மண்ணச்சநல்லூர் போலீசில்புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.